இன்று இடியுடன் கூடிய மழை!

0

இலங்கையில் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம்நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.

இதற்கமைய மேல்,சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மதறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதிகளில் 75 மில்லி மீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்படுள்ளது.

மேலும் மத்திய நடை நாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ வரை அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறனர்.

Leave a Reply