அரச சேவையில் ஈடுபடும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வீட்டில் இருந்தவாறு தொழில் புரிவதற்கான சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் சுற்றுநிருபம் ஒன்று பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்தவிடயத்தை இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே தெரிவித்திருந்தார்.
மேலும் அரச நிறுவனங்களின் பிரதானிகளின் தீர்மானத்திற்கு அமையவே வாரதிற்கு ஒரு குழுவினர் என்ற அடிப்படையில் இரு குழுக்களாக பிரிந்து பணியாளர்களை கடமைகளைப் அழைப்பது தொடர்பான விடயமும் குறித்த சுற்று நிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



