உந்துருளி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

0

திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம் பெற்ற உந்துருளி விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்பலகாமம் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிக்கு செல்வதற்காக மற்றுமொறு பெண்ணுடன் உந்துருளி ஒன்றில் பயணித்துள்ளார்.

இவ்வாறு பயணித்த போது குறித்த உந்துருளி வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அத்துடன் மயிலங்குடா பகுதியைச் 21 வயதினை உடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த மற்றுமொறு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மேலும் குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply