தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்கள் மாத்திரமே பேருந்தில் பயணிக்கலாம்!

0

தனியார் பேருந்துகளில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்களுக்கு மாத்திரமே பயணம் செய்பவதற்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய குறித்த செயற்பாட்டை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் அமுலில் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியன்று மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே பயணத் தடை நீக்கப்படும் பொழுது 2 தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் மாத்திரமே பேருந்தில் பயணிப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த செயற்பாட்டின் மூலம் கொவிட் நோய் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply