தற்போது நாட்டில் வாகன விபத்துக்களினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் குறித்த விபத்துகளினால் 10 பேர் மரணித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்கள் 6 பேர் உந்துருளியில் பயணித்தவர்கள் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் மூன்று பாதசாரிகளும் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் அதிக அளவில் உந்துருளிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விபத்துக்களே தற்போது இடம்பெற்று வருகின்றது.
ஆகவே வீதியில் சாரதிகள் பயணிக்கும் போது மிகுந்த அவதானத்துடனும் ,பொறுப்புடனும் செயற்படுமாறு காவற்துறை பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.