பருத்தித்துறையில் 6 வர்த்தகர்கள் தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் பணியாற்றிய 70 பேரைக் காணவில்லை!

0

யாழ் பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 வர்த்தகர்கள் தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் பணியாற்றிய 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய அவர்கள் சமூகத்தில் நடமாடுவதால் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத் துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் பருத்தித்துறை நகரில் கொவிட் தொற்றடன் அடையாளம் 6 வர்த்தகர்களும் புத்தளம் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள்.

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கொவிட் வைரஸ் தொற்று உள்ளமை நேற்று வெள்ளிக்கிழமை கண்டறிப்பட்டுள்ளது.

அதனையடுத்து தொற்றாளர்களை அடையாளம் கண்டு கொவிட் -19 இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்ட போது 6 வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

அவர்கள் 6 பேரும் பிசிஆர் மாதிரிகளை வழங்கிய நிலையில் தமது சொந்த ஊரான புத்தளம் மற்றும் காத்தான்குடிக்கு சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களிடன் பணியாற்றியவர்களை சுயதனிமைப்படுத்த சென்ற போது அவர்களும் தலைமறைவாகியுள்ளனர்.

அவ்வாறு சுயதனிமைப்படுத்துவதற்றாக 70 பேரின் விவரங்களுடன் சுகாதாரத் துறையினர் காவற்துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.

மேலும் , தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு குறைந்தது ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply