நாட்டில் மீண்டும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமையகுறித்த வாகன விபத்துகளினால் நேற்றைய தினத்தில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெற்ற விபத்துகளில் 7 விபத்துகள் உந்துருளிகள் மூலம் இடம்பெற்றுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



