யாழ் நகரில் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் கொவிட் 19 தொற்று தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு இன்றையதினப் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய குறித்த நிகழ்வின் போது கவனம், அபாயம் மற்றும் அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட சர்வமதப் பேரவையினரால் கொரோனா விழிப்புணர்வு பதாதைகள் யாழ் நகரப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மதத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



