இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடா ?

0

இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் உட்பட பல எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படப் போவதாக ஊடகஙகளில் தகவல்கள் வெளிவருகின்றபோதிலும் அதனை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில முற்றாக மறுத்துள்ளார்.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு என வெளிவரும் தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் நாட்டின் களஞ்சியத்தில் இருப்பதாகவும், மேலதிகமாக 35000 மெற்றிக் தொன் எரிபொருள் நாட்டிற்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply