புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி.

0

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலை பிரதமரும், நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச இன்று வெளியிட்டுள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து இலங்கையில் தங்கியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் புலம்பெயர் கொடுப்பனவினை, அவர்கள் தமது நாட்டிற்கு அனுப்பி வைப்பதனை மட்டுப்படுத்தும் வகையிலான விடயங்களை உள்ளடக்கி குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply