சனி பகவானின் அருளை பெற சனிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

0

நம்மில் பலரும் நவகிரகங்களிலேயே மிகவும் பயப்படும் கிரகமாக சனி பகவானை பார்ப்பது உண்டு. அவர் உக்கிரமானவர், அவர் நம் ராசிக்கு வந்தால் வாழ்வில் சிக்கல் ஏற்படும் போன்ற பய உணர்வுகள் தோன்றுவது உண்டு. சனி பகவான் அப்படிப்பட்டவர் கிடையாது. அவரைப் போன்ற நீதி அரசரைப் பார்த்திருக்கவும் முடியாது. அவரைப் போன்ற வல்லலையும் நாம் காண முடியாது எனலாம்.

அப்படி நீதிக்கு அரசராக திகழும் சனி பகவான், நாம் செய்த பாவத்திற்கு ஏற்ப நம் ராசிக்கு வரும் போது தண்டனைகள் வழங்குவது வழக்கம். சனி திசை அல்லது சனி புத்தி நடைப்பெறும் போது நாம் சனி பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம் சொல்லி ஜெபித்தால், அவரால் ஏற்படக்கூடிய தீய வினைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

கீழே குறிப்பிட்டுள்ள சனி பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம் குறைந்தது 36 அல்லது 54 முறை சொல்வது உத்தமம். சனி பகவானான அதிபதி மகா விஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும்.

இந்த மந்திரத்தை பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் நாளில் சனி பகவானை தரிசித்து வழிபடுவது நல்லது. சனி ஷேத்திரமான திருநள்ளாறு கோயில் மற்றூம் திருப்பதி சென்று வழிபட்டு வந்தால், சிறந்த பரிகாரமாக அமையும்.

சனி காயத்ரி

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க அஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்

ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்கு பாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

இந்த சனி கிரகத்திற்குரிய காயத்ரி மந்திரம் சொல்லி சனி பகவானின் அருளைப் பெறுங்கள். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply