திருமணமானவர்கள் ருத்ராட்சம் அணியலாமா? – ருத்ராட்சம் அணிவதற்கான விதிகள்

0


திருமணமானவர்கள் ருத்ராட்சம் அணியலாமா? – ருத்ராட்சம் அணிவதற்கான விதிகள்
ருத்ராட்சம் அணிவதால் பல்வேறு நற்பலன்கள் உண்டு என அறிந்த பலர், அதை யார் எல்லாம் அணியலாம், எத்தனை முக ருத்ராட்சம் அணியலாம், திருமணமானவர்கள் அணியலாமா என பல்வேறு கேள்விகள் தங்கள் மனதில் எழுவது உண்டு.

ஒன்று முதல் 38 முக ருத்ராட்சங்கள் வரை முன்பு இருந்தன. ஆனால் தற்போது 1 முதல் 21 வரை ருத்ராட்சங்கள் தான் கிடைக்கப்படுகின்றது.

அதிலும் 5 மற்றும் 6 முக ருத்ராட்சங்கள் தான் அதிகளவில் கிடைக்கப் பெறுகின்றன. ஏனைய முக ருத்ராட்சங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. இதனால் பல வியாபாரிகள் அந்த மாதிரியான ருத்ராட்சங்களை போலியாக தயார் செய்து விற்பனை செய்தும் வருகின்றனர்.

ருத்ராட்சம் அணியும் முன் ஒவ்வொரு வாருக்கும் பல கேள்விகள் எழுவது உண்டு.
திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா, அசைவம் சாப்பிடலாமா, எத்தனை முக ருத்ராட்சம் அணியலாம் என்ற கேள்விகள் எழுகின்றன.

ருத்ராட்சம் அணிந்தால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா?

திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா?
தெய்வீக சக்திகள் கொண்ட ருத்ராட்சத்தை திருமணம் ஆனவர்களும் அணிந்து பயன்பெறலாம்.

முந்தைய காலத்தில் ருத்ராட்சம் அணியக் கூடாது, சைவ சமயம் அழிப்பதற்காக, அது குறித்து பல வதந்திகள் பரப்பட்டன.

ருத்ராட்சம் அணிந்தால் சன்னியாசியாக போய்விடுவார்கள் என்ற மூட நம்பிக்கை நிலவுகின்றது. கும்பஸ்தனும் சரி, இறைவனை நோக்கிய சன்னியாசியாக போக விரும்புபவனும் சரி ருத்ராட்சம் அணிந்து இறைவனின் அருட்கடாட்சத்தைப் பெறலாம்.

சிவன் கோயிலில் காலையில் சென்றால் நீங்கள் பள்ளி எழுச்சி என்ற நிகழ்வைப் பார்க்க முடியும். அதில் சிவனும், அம்பாளும் ஒரு ஊஞ்சலில் ஒன்றாக இருப்பதைப் பார்க்க முடியும்.

பின்னர் சிவனையும், அம்பாளையும் அவர் அவர் கருவறைக்கு கொண்டு செல்வது வழக்கமாக இருக்கும்.
இரவு நேரத்தில் அர்த்தஜாம பூஜை நடப்பது வழக்கம். அந்த நேரத்தில் சிவனையும், அம்பாளையும் அந்த பள்ளியறையில் இருக்கும் ஊஞ்சலில் வைப்பார்கள்.

இதை ஏன் செய்கின்றார்கள் என்றால் சிவனும், அம்பாளும் சேர்ந்து இருக்கின்றார்கள் என கூறம் தார்பரீகம். ஆணும், பெண்ணும் இணைந்ததே வாழ்க்கை என்பதை காடும் விதமாக உள்ளது.

ருத்ராட்சம் அணிந்த இறைவனே குடும்பமாக இருக்கும் போது, நாம் திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா என்ற கேள்வி கேட்பது அர்த்தமற்றது.

குடும்ப வாழ்க்கை அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக ஈசன் உள்ளார். அதனால் திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணிவது தவறில்லை.

ருத்ராட்சம் அணிபவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். தினமும் குளிக்க வேண்டும். அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும், போதை வஸ்துக்களை பயன்படுத்தக் கூடாது. இது போன்ற சுத்தத்தை கடைப்பிடிப்பது அவசியம்.

இல்வாழ்க்கைக்கும், ருத்ராட்சம் அணிவதற்கும் தொடர்பு இல்லை. ருத்ராட்சம் அணிவதால் தீய எண்ணங்கள், திருஷ்டி, வக்கிர பார்வைகள் நீங்கும். தைரியம் பிறக்கும்.

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அணிவது தவறில்லை.

எப்போது அணியக் கூடாது:
சுப நிகழ்ச்சியின் போது ருத்ராட்சம் அணிவது சிறப்பு. ஆனால் இறப்பு போன்ற அசுப காரியங்களில் கலந்து கொள்ளும் போது அதை வீட்டில் எடுத்து வைத்துவிட்டு செல்வது நல்லது.- Source: samayam


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply