குருபெயர்ச்சி 2019 – எந்தெந்த ராசிக்கு விபரீத ராஜயோகம்..?

0

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார்.

வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29 ஆம் தேதியும் , திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5 ஆம் தேதியும் நிகழ்கிறது .

நிகழப்போகும் குருப்பெயர்ச்சியினால் ரிஷபம் , கடகம் , மகரம் ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோக காலமாகும் .


ரிஷபம்

ரிஷப லக்னத்திற்கு 8 க்கு உரியவர் குரு . அவர் 8 இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும் . சுக்கிரன் உங்க ராசி அதிபதி அவர் அசுர குரு அவருக்கு எதிரிதான் குருபகவான் தேவ குரு . உங்க ராசிக்கு 8 மற்றும் 11 ஆம் அதிபதி அவரே . அவர் ஆட்சி பெற்று அமரும் காலத்தில் பல நன்மைகள் ரிஷபத்திற்கு நடைபெறப்போகிறது . அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தை அடைகிறார் . ரிஷபத்தை விபரீத ராஜயோகம் கிடைக்கும் . சனி கேது கூடவே இருந்தாலும் குரு பகவானால் நன்மைகள் நடைபெறும் .

கடகம்

கடகம் ராசிக்காரர்களே ஆறுக்குடைய குரு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்க விபரீத ராஜயோகம் வந்திருக்கிறது . ஆறாம் இடம் போட்டி பந்தையம் , எதிர்ப்பு நோய் , கடன் ஸ்தானம் , கடன்கள் அடைபட வருமானம் வரும் பொருட்கள் வாங்குவீர்கள் . குருவின் பார்வை இம்முறை உங்க ராசிக்கு 10, 12 வது வீடுகளின் மீது விழுகிறது . 10 வது வீட்டின் மீது குரு பார்வை படுவதால் போட்டி தேர்வில் வெற்றி பெறுவீர்கள் . நல்ல வேலை கிடைக்கும் . தொழிலில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும் . 12 வது வீட்டின் மீது குரு பார்வை விழுவதால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும் . இது வரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் . உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

மகரம்

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடடும் ராஜ ஜோகம் என்ற விதியில் யோகத்தை செய்யும் . நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம் . 12 ஆம் வீட்டில் அயன ஸ்தயனத்தில் அமர்ந்த ராசி அதிபதி சனி அமர்ந்து முடக்கிப் போட்டார் . இனி குரு அங்கு வருவதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட தீமைகளை குறைப்பார் . தூர தேச பயணங்கள் அமையும் .

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு பாக்யாதிபதி பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் . அவரின் பார்வையும் உங்க ராசியின் மேல் விழுவதால் குருவின் பரிபூரண ஆசி கிடைக்கப்போகிறது . மேஷம் ராசிக்காரர்களுக்கு இது வரப்பிரசாதம் . யோகம் கிடைக்கும் . செல்வம் செல்வாக்கு சேரும் . உங்கள் ராசியையும் ராசிக்கு மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்ப்பதால் இது ராஜயோக காலமாக அமையப்போகிறது . பாக்ய குருவினால் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பு அரவணைப்பு கிடைக்கும் . புதிய வேலை , தொழில் வளர்ச்சி , புரமோசன் கிடைக்கும் . அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும் . ஆளுமை புகழ் கீர்த்தி கிடைக்கும் . வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் . தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் . என்ன தொழில் செய்தாலும் அது வெற்றிதான் . தொட்டது துலங்கும் . மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் .

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் இடத்து குருவினால் பல அல்லல்கள் ஏற்பட்டது . இப்போது களத்திர ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் பல அற்புதங்கள் நிகழப்போகிறது . மிதுன ராசிக்காரர்களுக்கு குரு கெடுதல் செய்ய மாட்டார் நன்மைதான் செய்வார் . கேதுவை நோக்கி குரு நெருங்குவதால் வீடு , அலுவலகத்தில் நன்மைகள் நடைபெறும் . சூழ்நிலைகள் மாறப்போகிறது . ஏழாம் வீட்டில் சனி கேது கிரகங்களினால் தினந்தோறும் சண்டைதான் . குரு ஏழாம் வீட்டிற்கு வந்து சனியும் கேதுவும் இணையப்போகும் காலம் இதுவாகும் . கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கப்போகிறது .

சிம்மம்

சிம்மராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டம் . எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் . புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும் . சிம்மராசிக்காரர்கள் வெளிநாடு செல்லும் யோகம் வந்து விட்டது .

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்க ராசிக்கு பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் உத்யோகத்தில் பதவி உயர்வினால் முன்னேற்றம் ஏற்படும் . வேலையே இல்லையே என்று நினைத்தவர்களுக்கு புது வேலை கிடைக்கும் , சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும் ,

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களே குரு பகவான் தனது ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 ஆம் வீட்டினை பார்வையிடுகிறார் . புதிய வேலை கிடைக்கும் . இதுநாள் வரை திருப்தியில்லாமல் வேறு வேலை செய்தவர்கள் இனிமேல் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும் . கை நிறைய சம்பளமும் வரும் . சிலர் வேலைக்காக வெளிநாட்டு பயணமும் செல்வீர்கள் .

தனுசு

தனுசு ராசிக்காரர்களே ஜென்ம குரு உங்களுக்கு நன்மைகளைத் தருவார் . வேலையில் பலருக்கு பிரச்சினை ஏற்பட்டது . இனி குரு பகவான் ஓயாமல் உழைக்க வைப்பார் . உழைக்க தயங்காதீர்கள் . நல்ல வேலை கிடைக்கும் . ஊதிய உயர்வுடன் புதிய வேலை கிடைக்கும் . இதுநாள் வேலைகளில் வேலை செய்யும் இடங்களில் இருந்த இருந்த பிரச்சினைகள் தீரும் . பதவிகளும் பட்டங்களும் தானாக தேடி வரும் .

கும்பம்

குரு தனுசு வீட்டிற்கு வருவதால் வேலையில் உள்ள பிரச்சினைகள் தீரும் . புரமோசன் கிடைக்கும் . அரசாங்க வேலை , போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் . நல்ல வேலைக்கு முயற்ச்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் . வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம் . பிள்ளைகள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் .

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவான் . உங்கள் ஏழாம் வீட்டையும் பாக்ய ஸ்தானம் , லாப ஸ்தானத்தை குரு பார்க்கிறார் . திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.-Source: times.tamil


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply