ஒவ்வொரு ராசியினரும் கட்டாயம் ஒரு தடவை சென்று வழிபட வேண்டிய சிவாலயங்கள் எது தெரியுமா…?

0

மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடவேண்டும். எந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால் சிவனின் முழு அருளைப் பெறலாம் என்பதைக் காண் போம்:
மேஷம்: மலைமேல் அமர்ந்த சிவனை வழிபடுவது நல்லது குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம்.

ரிஷபம்: திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம்.

மிதுனம்: திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வரலாம். சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கடகம்: திருக்கடையூர், திருவானைக்காவல், வேலுர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்.

சிம்மம்: சிதம்பரம், திருவண்ணாமலை சென்று வழிபடலாம்.

கன்னி: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம்.

துலாம்: சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும்.

விருச்சிகம்: திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது.

மகரம்: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

கும்பம்: சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள் உங்களை வந்தடையும்.

மீனம்: வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோவில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம்.- Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply