தினமும் வீடுகளில் விளக்கேற்றும் போது பாட வேண்டிய பாடல்

0

திருவிளக்கினை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது நமது இயல்பாகும். அருளது சக்தியாகும் அரன் தனக்கு இறைவருடைய அருளே சக்தி எனப்போற்றப்படுகிறது. அத்தகைய இறையருளை இறைவியை தீபத்தில் அமரச்செய்து நலம் பெறுதல் பொருட்டே வீடுகளில் காலையும் மாலையும் விளக்கேற்றப்படுகிறது. ”ஆவாஹனம்” என்னும் சொல்லுக்கு ”அழைத்தல்” என்று பொருள். எங்கும் நிறைந்திருக்கும் இறையருளை- சக்தியை நாம் ஏற்றும் தீபத்தில் அமர்ந்து அருள்புரியும்படி செய்ய வேண்டும்.

கீழே காணும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலைப்பாடியவாறே தீபத்தை ஏற்ற வேண்டும். இப்பாடலை அருளியவர் குமரகுருபர் சுவாமிகள் ஆவர். இவர் மதுரையில் அரங்கேற்றம் செய்யும்போது மீனாட்சியம்மையே இப்பாடலுக்கு மகிழ்ந்து, குழந்தையாக வந்து முத்துமாலையை அருளி மறைந்தாள் என்பது உண்மை வரலாறு ஆகும்.

பெருந்தே னிறைக்கும் நறைக் கூந்தற்
பிடியே வரு முழுஞானப்
பெருக்கே வருக பிறை மௌலிப்
பெம்மான் முக்கட் சுடர்க்கிடுதநல்
விருந்தே வருக மும்முதற்கும்
வித்தே வருக வித்தின்றி
விளைந்த பரமா னந்தத்தின்
விளைவே வருக பழமரையின்
குருந்தே வருக அருள் பழுத்த
கொம்பே வருக திருக்கடைக்கண்
கொழித்த கருணைப் பெருவெள்ளம்
குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர்
மருந்தே வருக பசுங்குதலை
மழலைக்கிளியே வருகவே
மலையத்துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே.

இப்பாடலை பாடிய வண்ணம் விளக்கை ஏற்றினால் இறையருள் ஒளியில் விளங்கியிருப்பாள். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply