இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் தீய எண்ணங்களை நீக்கும்

0

ஸ்ரீ ஹயக்ரீவருக்குரிய இந்த ஆற்றல் மிக்க மூல மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் சனி கிரக தோஷங்கள் நீங்கும். தீய குணங்கள் மற்றும் எண்ணங்கள் அறவே நீங்கும்.

தீய எண்ணங்களை நீக்கும் ஹயக்ரீவர் மூல மந்திரம்
ஹயக்ரீவர்
உத்கீத ப்ரண வோத்கீத ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோசிந்த்ய ஸர்வம் போதய போதய

மகாவிஷ்ணுவின் அம்சமான ஸ்ரீ ஹயக்ரீவர் பெருமாளுக்குரிய ஆற்றல் மிக்க மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதிப்பது நல்லது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்கு சென்று பெருமாள் அல்லது ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி, தாமரை பூ சமர்ப்பித்து சந்நிதிக்கு முன்பு தீபம் ஏற்றி, இந்த மூல மந்திரத்தை 108 முறை முதல் 1008 முறை வரை துதிப்பதால் மாணவர்கள் கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி பெறுவார்கள். புதிய சிந்தனை மற்றும் செயலாற்றல் உண்டாகும். சனி கிரக தோஷங்கள் நீங்கும். தீய குணங்கள் மற்றும் எண்ணங்கள் அறவே நீங்கும். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply