இந்த ராசிக்காரங்க இந்த வழிபாட்டை செய்ய மறக்காதீங்க!

0

இன்னைக்கு சிலர் கண்டிப்பாக பானுமத்திம தோஷத்திற்கான பரிகாரத்தை செய்தே ஆக வேண்டும். அதுக்கு முன்னால், பானுமத்திம தோஷத்தைப் பற்றி பார்த்துடலாம். நேற்று சந்திரகிரகணம் நடந்ததில்லையா… அப்படி சந்திரகிரகணம் முடிஞ்சதும் அடுத்த நாள் பானுமத்திம தோஷம் ஏற்படும். அதாவது, சூரியன், புதன் மற்றும் சுக்கிரனுக்கு இடையே பயணிக்கும்போது ஏற்படுவதே பானுமத்திம தோஷமாகும். சூரியபகவான், கடக ராசிக்குள் வரும்போதுதான் தட்சிணாயனம் தொடங்குகிறது. இன்று ஆடி 1 முதல் சூரியன் கடக ராசிக்குள் வருகிறார். தட்சிணாயனத்தில் நீட்சமாக இருக்கும் செவ்வாயுடன் சூரிய பகவான் சேர்கிறார். இதனால்தான் தோஷம் ஏற்படுகிறது.

அதனால, இந்த சமயத்துல சில ராசிக்காரங்களும், ஜாதககாரங்களும் மறக்காம சூரியனுக்கும், செவ்வாய்க்கும் இன்று பரிகாரம் செய்துக் கொள்வது நல்லது. இன்று சூரியன் புதனுக்கும், சுக்கிரனுக்கும் இடையே பயணம் செய்கிறார். அதனால் தான் இதுக்கு பானுமத்திமம் என்று பெயர். பானு என்றால் சூரியன். மத்திமம் என்றால் நடுவில். பானு இரண்டு கிரகங்களுக்கு இடையே இருப்பதால் ஏற்படும் தோஷத்துக்கு பானுமத்திம தோஷம் என்று பெயர்.

சரி, யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும்? ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அனைவருமே பரிகாரம் செய்ய வேண்டும். சூரியன் கடக ராசியில் பிரவேசிப்பதால், கடக ராசியுடையவர்களும், கடக லக்னத்தை உடையவர்களும் பரிகாரம் செய்ய வேண்டும். இது தவிர, ஜனன கால ஜாதகத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டும் சேர்ந்து இருப்பவர்கள் அனைவரும் பரிகாரம் செய்துக் கொள்வது நல்லது.
பரிகாரம் என்று சொன்னவுடனே பதற வேண்டாம்.

ரொம்ப எளிய பரிகாரம் தான்.. வீட்டுக்கருவில் இருக்கும் சிவன் கோயிலுக்கும், முருகன் கோயிலுக்கும் சென்று வந்தாலே போதும் இந்த பானுமத்திம தோஷத்தில் இருந்து விடுபட்டுவிடலாம். ஆனா மறக்காம இன்னைக்கே கோயிலுக்குப் போய் வாருங்கள்- Source: toptamil


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply