பாற்கடலில் வீற்றிருக்கும் ஆதிஷேசன் காயத்ரி மந்திரம்

0

பாற்கடலில் வீற்றிருக்கும் பெருமாளின் படுக்கையாக சேவை செய்யும் ஸ்ரீ ஆதிசேஷனை போற்றும் இந்த மந்திரத்தை தினமும் துதிப்பதால் ஆதிசேஷன் மற்றும் பெருமாளின் ஆசிகள் கிடைக்கும்.

ஆதிஷேசன்
வைகுண்டத்தில் பாற்கடலில் வீற்றிருக்கும் பெருமாளுக்கு படுக்கையாக இருப்பவர் ஐந்து தலை பாம்பாக இருக்கும் ஆதிசேஷன் ஆவார். அவரை வழிபடுவதற்குரிய “ஆதிஷேசன் காயத்ரி மந்திரம்” இதோ

ஓம் ஸஹஸ்ர சீர்ஷாய வித்மஹே

விஷ்ணு தல்பாய தீமஹி
தன்னோ ஆதிசேஷ ப்ரசோதயாத்

பாற்கடலில் வீற்றிருக்கும் பெருமாளின் படுக்கையாக சேவை சாதிக்கும் ஸ்ரீ ஆதிசேஷனை போற்றும் காயத்ரி மந்திரம் இது. சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் துதிப்பதால் ஒருவருக்கு ஆதிசேஷன் மற்றும் பெருமாளின் ஆசிகள் கிடைக்கும். மேலும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்ததும் பெருமாள் கோயிலுக்கு சென்று இம்மந்திரம் துதித்து ஆதிசேஷனையும், பெருமாளையும் வழிபடுவதால் ராகு – கேது கிரகங்களின் கிரக தோஷங்கள், நாக தோஷங்கள் நீங்கும். பாம்பு போன்ற விஷ ஜந்துக்களினால் ஆபத்து ஏற்படாமல் காக்கும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply