ரித்விகா சொன்னதை தானே மதுமிதாவும் சொன்னாங்க? முன்னாள் பிக்பாஸ் பிரபலம் கேள்வி

0

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் சாம்பியனுமான ரித்விகா தான் ஒரு தமிழ்ப்பொண்ணு என்று கூறியபோது யாரும் கோபப்படவில்லை, மாறாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. ஆனால் அதையே மதுமிதா சொன்னபோது கோபம் ஏன்? என்று காஜல் பசுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் ரித்விகா, ஜனனி ஐயர், விஜயலட்சுமி ஆகியோர் தமிழ்ப்பெண் ஒருவர் தான் பட்டம் வெல்ல வேண்டும் என்று கூறியபோது யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் டென்ஷன் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரித்விகாவுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருந்தது என்பதும், மதுமிதா சொன்னதையே லாஸ்லியா நேற்று சொல்லியிருந்தால் எந்தவித பிரச்சனையும் எழுந்திருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் ‘நேற்று இரவு சேரனுக்கு தனது இதயத்தை தருவதாக உருக்கமாக சொல்லிவிட்டு இன்று அவரை நாமினேஷன் செய்றீங்களே’ என்றும் காஜல் வனிதாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply