நினைத்தது நடக்க உதவும் குலசுந்தரி காயத்ரி மந்திரம்

0

இந்த மந்திரத்தை 108 முறை அல்லது ஆயிரத்தெட்டு முறை உரு ஜெபிப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும். செல்வ வளம் மற்றும் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும்.

நினைத்தது நடக்க உதவும் குலசுந்தரி காயத்ரி மந்திரம்
ஓம் குலஸுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்

நமது உடலில் இருக்கும் குண்டலினி சக்தியே குலசுந்தரி தேவியாக கருதி வணங்கப்படுகிறாள். இந்த மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்லலாம். எனினும் மந்திரம் சித்தியாக மாதத்தில் வருகின்ற வளர்பிறை நவமி திதி தினம் மற்றும் தேய்பிறை சப்தமி தினத்திலும் இந்த மந்திரத்தை 108 முறை அல்லது ஆயிரத்தெட்டு முறை உரு ஜெபிப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும். செல்வ வளம் மற்றும் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும்.

மனிதர்களின் உடல் இயற்கையின் அற்புதமான ஒரு படைப்பு என்பது சித்தர்களின் கருத்து. அப்படியான இந்த மனித உடலில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்ற ஏழு ஆதார சக்திகளை இயக்கி, குண்டலினி சக்தியை மேல் எழும்ப செய்து. இறை தரிசனம் பெற்று பிறவா பேரின்ப அடையவே சித்தர்கள் யோகம், தியான கலைகளை கண்டுபிடித்தனர். அதில் குண்டலினி சக்தியையே குலசுந்தரியாக போற்றி நம் சித்தர்கள் வழிபட்டனர். அந்த குலசுந்தரி தேவிக்குரிய இம்மந்திரத்தை துதித்து வழிபடுவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply