
மே மாதம் 22-ம் தேதியில் இருந்து மே மாதம் 28-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

22-ந் தேதி (புதன்)
* சங்கடஹர சதுர்த்தி.
* மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் வீதி உலா.
* காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் யானை வாகனத்தில் பவனி.
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், காலை வேணுகான கண்ணன் திருக்கோலமாய் காட்சி.
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் காலை ஆடும் பல்லக்கிலும், இரவு புஷ்ப பல்லக்கிலும் புறப்பாடு. விடையாற்று உற்சவம்.
* தர்மபுரி ஞானபுரீஸ்வரர் குதிரை வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
23-ந் தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.
* தர்மபுரி ஞானபுரீஸ்வரர் கோவில் ரத உற்சவம்.
* காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம், இரவு புஷ்ப பல்லக்கு.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் உபய நாச்சியார்களுடன் ரத ஊர்வலம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
24-ந் தேதி (வெள்ளி)

* திருவோண விரதம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாட வீதி புறப்பாடு.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் வீதி உலா.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* தர்மபுரி ஞானபுரீஸ்வரர் கோவிலில் நடராஜர் தீர்த்தம், பஞ்சமூர்த்திகள் பவனி.
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
25-ந் தேதி (சனி)

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
* குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
* இன்று கருட தரிசனம் நன்மை தரும்.
* மேல்நோக்கு நாள்.
26-ந் தேதி (ஞாயிறு)

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குள்ளகரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
27-ந் தேதி (திங்கள்)

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
