எரிபொருள் விநியோக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

0

இலங்கை அதிகாரிகள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், எரிபொருள் விநியோக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என முன்னணி எரிசக்தி வர்த்தக நிறுவனமான பிபி எனர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளது.

280,000 பீப்பாய்கள் எரிவாயு எண்ணெய்க்கான தற்காலிக விலைப்பட்டியலின்படி உரிய தொகையை செலுத்தாததால் எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை ரத்து செய்ய தமக்கு உரிமை உள்ளதாக, அந்த நிறுவனம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளது.

தமது ஏற்றுமதி வந்ததைத் தொடர்ந்து 14 நாட்களுக்குள், பணம் செலுத்தப்பட வேண்டும் என அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் ஏற்கனவே நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல்களின் கொடுப்பனவுகளை அரசாங்கம் தாமதப்படுத்தியதை அடுத்து, இலங்கை மற்றொரு கடுமையான எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

அத்துடன் எரிபொருள் கப்பல்களுக்காக செலுத்துவதற்கு, 587 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதற்கு அரசாங்கம் போராடி வருகிறது.

Leave a Reply