முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை இலங்கை திரும்ப வாய்ப்புள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதுவரையில், முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவது தொடர்பில் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்ததுடன் ஜனாதிபதியை பதிவி விக்லகுமாறும் வலியுறுத்திய நிலையில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்க்ஷ நாட்டவிட்டு வெளியேறியிருந்தார்.
இலங்கையிலிருந்து மாலைதீவிக்கு சென்ற கோட்டாபய தனது ஜனாதிபதி பதவியையும் இராஜினாமா செய்திருந்தார். மாலைதீவில் இருந்து வெளியேறிய கோட்டாபய சிங்கப்ப்பூரில் தங்கியிருந்தார்.
எனினும் அவரதி விசாவை சிங்கப்பூர் நீடிக்காத நிலையில் அங்கிருந்து வெளியேறி தாய்லாந்தில் தஞ்சமடைந்த நிலையில், தற்போது நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



