இராணுவத்திற்கு நாட்டின் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்த அனுமதி.

0

இலங்கையில் உச்சபட்ச இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தலைமையகம் வெளியிட்ட விசேட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச சொத்துக்கள் மற்றும் பொதுமக்களின் உயிர்களுக்கு இழப்பு ஏற்படுவதைத் தடுக்க தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரத்தை பயன்படுத்த முடியும் எனவும் கூறப்படுகின்றது.

அதற்கமைய உச்சபட்ச இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்த இலங்கை அரசாங்கம் இராணுவத்தினருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply