இலங்கைக்கு வரவுள்ள ஒரு தொகுதி மருந்து.

0

சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துத் தொகுதி இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு கொண்டுவரப்பட்ட மருந்துத் தொகுதியின் மதிப்பு சுமார் 500 மில்லியன் யுவான் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த மருந்துகள் 2 கட்டங்களாக இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதன் முதல் தொகுப்பில் 10 மில்லியன் யுவான் மதிப்புள்ள ஊசிகள் 256,320 உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இரண்டாவது மருந்துத் தொகுதி இம்மாத நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply