இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு முன், ஆண்டுக்கு 1.3 பில்லியன் அமெரிக்க டொலரை இது ஈட்டி வந்தது.
எனினும் தற்போது 1948 இல் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
மேலும் கடந்த வருடம் உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது, நவம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி 18 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



