அலரி மாளிகைக்கு முன்பாக மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென காவற்துறையினர் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம்நிராகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்றையதினம் குறித்த கோரிக்கையை காவற்துறையினர் முன்வைத்த நிலையில் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
மேலும் இன்றைய தினம் அதிகாலை முதல் அலரி மாளிகைக்கு அருகே வாயிலைமூடி காவற்துறையினரின் பல பஸ்கள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அங்கே பெருமளவிலானோர் கூடிவருவதாக தெரியவந்துள்ளது.



