இன்று இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாடு.

0

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வகட்சி மாநாடு இடம்பெறவுள்ளது.

இதற்கமைய குறித்த மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் குறித்த மாநாட்டை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே. வி. பி என்பன புறக்கணித்துள்ளன.

எதிரணியின் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதலான கட்சிகளும் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளனர்.

மேலும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்துள்ளார்.

இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அதன் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிக்குள், இலங்கை தமிழரசு கட்சி ஆகிய கட்சிகள் சர்வ மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply