சட்டவிரோதமான முறையில் கடற்சங்குகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செயப்படுள்ளார்.
இதற்கமைய குறித்த நபர்
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியில் வைத்து கைது செயப்படுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 160 கடற்சங்குகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



