அரச நிறுவனங்கள் தொடர்பில் விசேட சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில் அரச நிறுவனங்களில் மின்சார மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் இன்று வெளியிடப்பட்டவுள்ளது.
அத்துடன் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகன பாவனை தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்படும்.
அவ்வாறு தனியார் துறையின் சேவையாளர்களின் அலுவலக நேரத்தை திருத்துவது தொடர்பில் தேசிய தொழில் ஆலோசனை சபை இன்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.
மேலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் தனியார் நிறுவன முதலாளிமார் மற்றும் தொழில் ஆணையாளர் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.



