தற்போது நாட்டில் வரட்சியான காலநிலை நிலவி வருகின்றது.
குறித்த வரட்சியான காலநிலை காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் காட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு வனப்பகுதிகளில் இந்த தீப்பரவல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த தீப்பரவல் காரணமாக 10 ஏக்கருக்கும் அதிகமான பகுதியில் காட்டுத் தீயினால் அழிவடைந்துள்ளது.



