க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகிறது.
இந்நிலையில் குறித்த பரீட்சைக்கு வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவர் தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் கைதிகள் இருவரும் 43 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மெகசின் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் இவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



