நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த 9 வயது சிறுமி.

0

நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் கிரிஹேன பிரதேசத்தில் உள்ள ரக்கனாவ நீர்வீழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து நேற்று (04) காலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி மற்றுமொரு குழுவினருடன் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி கவலைக்கிடமான நிலையில் தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வரும் உயிரிழந்தவர் அன்ஹெட்டிகம பிரதேசத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply