கொழும்பு துறைமுக நகர நடைபாதை மக்கள் பாவனைக்காக திறப்பு.

0

கொழும்பு துறைமுக நகர நடைபாதை மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.

இதற்கமைய குறித்த நடைபாதை இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் மக்கள் பாவனைக்காக திறக்கப்படுகின்றன.

அத்துடன் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள கொழும்பு துறைமுக நகர நுழைவாயில் ஊடக உட்பிரவேசிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த நடைபாதை நேற்று திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply