நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பில் அதிகாரிகளால் வெளியிடப்படும் புள்ளி விபரங்களில் சிக்கல் நிலை ஏற்படுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் கடந்த வார இறுதியில் மக்களின் நடத்தை மிகவும் வருத்தம் அளிப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.
மேலும் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பில் வெளியிடப்படும் தகவல்கள் எந்தளவு உண்மையானது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



