மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சாரதியை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்திலேயே அனுமதி பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் அன்றைய தினமே சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் போது மோசடிகள் நடப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனுராதபுர அலுவலகத்தில் இப்படியான மோசடிகள் சம்பந்தமாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கிடைத்த சில முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு எழுத்து மூல பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பின்னர், செய்முறை பயிற்சியில் தேர்ச்சி பெறும் நபர்கள் 500 ரூபாய் செலுத்திய பின்னர் சாரதி அனுமதி பத்திரத்தை வழங்கும் நடைமுறை இருந்து வந்தது.
இந்நிலையில் செய்முறை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்தில் சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படாவிட்டாலும் தற்காலிக அனுமதி பத்திரம் கிடைக்கும் என்பதுடன் அதனை பயன்படுத்தி வாகனங்களை ஓட்ட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



