சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மறுதினமே அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு விஜய் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து அவசர அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.

சிங்கப்பூருக்கு சென்று மறுதினமே நாடு திரும்பி வந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தனது பயணத்தை விரைவில் முடித்துக் கொண்டு நாடு திரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இல்லாத நிலையில் கட்சியின் முன்னணி எம். பி. க்களுடன் பேசிவிட்டு இன்று காலை நிதியமைச்சர் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆளும் கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரை பதவி நீக்கம் செய்யாவிடின் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அமைச்சர் சமல் ராஜபக்ச நெருங்கி அமைச்சர்களுடன் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார் என்பதுடன் ஜனாதிபதி இன்று பல முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply