நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி இளமை படிப்படியாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இலங்கைக்கு ஒரு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை விருத்தியடைந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.
ஆகவே நாட்டின் தெற்கு பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும்.
அத்துடன் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பற்றி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறனர்.



