கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு புகழஞ்சலி கூட்டம் பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.
இதில் நடிகர் விஷால் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.
நடிகர் புனித் ராஜ்குமாரின் செய்தியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவர் மிகத் திறமையான நடிகர்.
இந்நிலையில் புனித ராஜ்குமார் இறந்த பிறகு இரண்டு நாட்களாக தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன்.
எனக்கு சொந்த வீடு இல்லை. வீடு வாங்க வேண்டும் என்று சிறிது பணத்தை சேமித்து வைத்தேன்.
வீடு பின்னர் கூட வாங்கிக் கொள்ள முடியும் . புனித் ராஜ்குமார் நடத்திய சக்திதாமா அனாதை இல்ல குழந்தைகளின் கல்விச் செலவை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
அத்துடன் இதற்கு அவரது குடும்பத்தினர் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்கின்றேன்.
புனித் விட்டு சென்ற நல்ல பணிகளை நாம் தொடர வேண்டும்.
அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
அனைவருக்கும் இதயம் உள்ளது ஆனால் நல்ல பணிகளை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பதில்லை.
அவர் சமூக சேவைகளை வெளியில் தெரியாமல் செய்துள்ளார்.
நான் விளம்பரத்திற்காக இந்த கல்விச் செலவை ஏற்பதாக கூறவில்லை.
உள்ளபடியே அவரது இந்த நல்ல சேவையை தொடர வேண்டும் என்ற நோக்கில் தான் இதை செய்கின்றேன்.



