நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 2,920 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் , 28,781 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 2,076 கொவிசீல்ட் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
மேலும் 101,368 பேருக்கு பைசர் தடுப்பூசியு , 726 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மொடர்னா இரண்டாவது தடுப்பூசி 3594 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



