இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை!

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வழிமாநாடளவிள்க்க வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.

இந்நிலையில் மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு கனத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பகங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply