தற்போது பரவலடையும் புதிய கொவிட் வைரஸ் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை அறிக்கை நாளைய தினம் வெளியிடப்படப்படவுள்ளது.
இதற்கமைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூற்று உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்து பரிசோதனைகளை இன்று மாலைக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் தற்போது டெல்டா கொரோனா வைரஸ் திரிப்பின் 3 பிறழ்வுகள் புதிதாக பரவல் அடைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது



