கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் அங்கு பல எச்சங்கள் இருப்பதை அவதானித்தனர்.
இதனையடுத்து காவல் துறையினருக்கு குறித்த விடயம் தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர்.
அத்துடன் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி இந்த எச்சங்களை பார்வையிட்ட பின்னர் அவற்றை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



