ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து உக்கல் அடையாத லஞ்சீட் பாவனைக்கு தடை!

0

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து
பொலித்தீனால் உற்பத்தி செய்யப்படும் உக்கல் அடையாத லஞ்சீட் பாவனைக்கு தடை விதிக்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவற்றை உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் என்பவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உடனடியாக பாவனையில் இருந்து நீக்குவதற்கான மேலும் எட்டு வகையான பொழுத்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கிய பட்டியலை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காக குறித்த
அமைச்சரவைப் பத்திரத்தில் இன்று கைச்சாத்திடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஒரு தடவை மாத்திரம் பாவனைக்கு உட்படுத்தப்படும் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் கரண்டிகள், முள் கரண்டி, ஜோக்கட் கரண்டி மற்றும் கத்திகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் இடியப்ப தட்டுகள், பக்திகள் மற்றும் திரி ஆகியவற்றை பொதியிடும் பொழுதின் உரைகள் பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் கோப்பைகள் ஆகியவை இவற்றுள் உள்அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply